தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவரின் அந்த பால் கலரை அடித்துக்கொள்ள தற்போது வரை ஆள் இல்லை. இந்நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமாவில் பெண்களின் நிலை பற்றி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
அதில் அவர், ‘நான் வேலை செய்யும் படங்களில் என் கருத்தை மிக அழுத்தமாகவும் கோபமாகவும் சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள் என கூறியுள்ளார். மேலும் நான் இரண்டு பான் இந்தியா படங்களில் நடித்து இருக்கிறேன். அவர்களிடம் சம்பளத்தை கூட எளிதில் வாங்கிவிடலாம். ஆனால் என் புகைப்படம் அந்த திரைப்பட போஸ்டரில் வருவது மிக மிக கஷ்டமான விஷயம்’ என கூறியுள்ளார்.
அதே சமயம் ஆண் நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளவில்லை என்றால் அது சாதாரண விஷயம். அதையே ஒரு பெண் நடிகை செய்தால் பெரிய பிரச்சனை எழும் என்று காட்டமாக பேசியுள்ளார். பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவே இவ்வாறு கூறியுள்ளது திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்