ஆப்கானில் பெண்கள் நடத்திய போராட்டத்தை படம் பிடித்ததாக பத்திரிக்கையாளர்களை தாலிபான்கள் அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடித்து துன்புறுத்திய அவலம்:
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர். இதனால், இங்கு பாதுகாப்பை உணராத மக்கள் அங்கிருந்து வெளியேற தினமும் காபூல் விமான நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும், போர் பதற்றம் நீடிக்கும் வகையில் ஆப்கானுக்கும்- பஞ்சூர் பகுதிக்கும் இடையே பயங்கர போர் நடைபெற்று வந்தது. இதோடு சேர்த்து, ஆப்கானில் இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
மேலும் சில நாட்களுக்கு முன்பு கோர் மாகாணத்தில் பணிபுரியும் 6 மாத கர்ப்பிணியான பெண் காவல் அதிகாரி தாலிபான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம், அந்த பெண்ணின் குடும்பத்தினர் கண்முன்னே நடந்திருப்பதாக தகவல் வந்தது. இந்த சம்பவமே மறையாத நிலையில், மீண்டுமொரு கொடூர சம்பவத்தை தாலிபான்கள் நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது, தாலிபான் அமைப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆப்கான் பெண்களை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் இரண்டு நபரை இழுத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பல பத்திரிகையாளர்கள் அவர்களின் கோர பிடியில் சிக்கி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்