தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங்காக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஈசியாக சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை தொட்டதில்லை. அவர் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் எக்கசக்கம். இருந்தாலும் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று அயராமல் உழைத்து அடுத்தடுத்த படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து தற்போது சினிமாவில் யாரும் தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இவரின் கேரியருக்கு அடிக்கல் நாட்டிய திரைப்படம் என்றால் அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய செந்தூர பாண்டியன் தான். இப்படத்தின் மூலமாக தான் விஜய் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டார். ஆனால் அந்த நன்றி விஸ்வாசம் கூட விஜய் இருந்து வருகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கூறி வருகின்றனர். அதாவது விஜயகாந்தின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர் வந்ததில்லை.
உங்க முகம் சுருக்கம், கரும்புள்ளியால் பாதிக்கப்பட்டிருக்கா? உங்களுக்கான சூப்பர் Face Pack!!
மேலும் சமீப காலமாக விஜயகாந்தின் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் அவரை ஒரு தடவை கூட விஜய் பார்க்கவில்லை. மேலும் இன்று வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் செந்தூரப்பாண்டி படத்தை பற்றியோ அல்லது விஜயகாந்த் பற்றியோ விஜய் வாயை திறந்து பேசியதே இல்லை. தனக்கு இப்படி ஒரு பாதையை அமைத்துக் கொடுத்த விஜயகாந்த்தை விஜய் இப்படி கண்டு கொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கிறது.