தலைவர் 169 படத்தில், கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை அமைக்க உள்ளதாக இருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் தான் பணியாற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதிரடி தகவல் :
நடிகர் ரஜினி தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைந்து உள்ளதாகவும், படத்திற்கான இறுதிகட்ட நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் திரைக்கதையை அமைக்கும் பணியில் கே.எஸ்.ரவிக்குமார் ஈடுபட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது தான் எந்த விதத்திலும் இந்த படத்தில் பணியாற்றவில்லை என ரவிக்குமார் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்