விடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டன. இனி அனைவரும் அடுத்து சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் விடுமுறைக்காக காத்திருக்க வேண்டியது தான். இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கவுள்ள, நடந்த சில விஷயங்களை காண்போம்.
சட்டசபை கூட்டத்தொடர்:
தமிழக சட்டசபைக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. முதல் நாள் ஆன இன்று சபாநாயகர் அவர்கள் உரை நிகழ்த்துவது வழக்கம். இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தொடரில் மேலும் 3 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மிகம்:
வைகுண்ட ஏகதேசியான இன்று வைணவ கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் மழை:
சென்னையில் நேற்று மாலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பல இடங்களில் மலை பெய்துள்ளது. மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி பல்கலைகழக தாக்குதல்:
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மர்மநபர்கள் கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தல பட ஷூட்டிங் – தர்பாருக்காக வெயிட்டிங்:
நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு தான் தலயின் அடுத்த படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், ‘தர்பார்’ படத்தில் சூப்பர்ஸ்டார் அவர்களும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளதால் எந்த காட்சியும் அப்பட சாயலில் இருந்து விடக்கூடாது என்பதில் படக்குழு தீவிரமாக உள்ளது.