சமீப காலமாக ஒரே பாலினத்தவர் ஜோடி திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாய்லாந்தை சேர்ந்த ஓரே பாலின தம்பதிகள் தங்களுக்கான சில அடிப்படை உரிமைகளுக்கு அரசு அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து தாய்லாந்து ஒரே பாலின தம்பதிகளுக்கு திருமண சமத்துவ உரிமை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இதற்கான மசோதாவை டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் முன்மொழிய உள்ளது. இதன் மூலம் இனி ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளவும், திருமண சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் இனி திருமண தம்பதிகளுக்கிடையே உள்ள உறவை கணவன் – மனைவி என்பதை ”திருமண பங்காளிகள்” என மாற்றியுள்ளது.
தமிழக பெண்களுக்கு இதில் இடம் உண்டு?? ஆளுநர் ஆர் என்.ரவி அதிரடி அறிவிப்பு!!