மாணவர்களுக்கு 15ம் தேதி முதல் பாடப்புத்தகம் விநியோகம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

பாடப்புத்தகங்கள் விநியோகம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு ஆரம்பித்து 3 மாதங்களை தாண்டி தற்போது தான் டிவி வாயிலாக பாடங்களை கற்பிக்க அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இம்முறை கொரோனா ஊரடங்கால் புத்தகங்களை அச்சிடும் பணி தாமதமாகி உள்ளது. பாடப்புத்தகங்களை பெற வரும் 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச மடிக்கணனியையும் எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடியோ வழி பாடங்களை மாணவர்களுக்கு லேப்டாப் வாயிலாக வழங்குவதற்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here