10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வுகள்:

மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னதாக மத்திய பிரதேச கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 2020 நவம்பரில் நடைபெற்ற திருத்தத் தேர்விலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற அரையாண்டு தேர்வுகளிலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மாணவர்கள் இப்போது மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

‘இன்னா மயிலு சிரிச்சுக்குனு’ பாடலுக்கு செம குத்து போட்ட பாக்கியலட்சுமி எழில் – வைரலாகும் வீடியோ!!

9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் 5 பாடங்களிலும் அவர்கள் பெற்ற அதிக மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 33% தேர்ச்சி மதிப்பெண்களை பெற இயலாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 10 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் முடிந்து நிலைமை சரியாகும் பொழுது அவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற தேர்வுகளை எடுத்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏப்ரல் 10 மற்றும் மே 1ம் தேதிகளில் முறையே நடக்க இருந்த 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக ஏப்ரல் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்நிலையில் மே 20ம் தேதி முதல் நடக்க இருந்த 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here