தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் பிரபாஸ் தற்போது வாங்கி வரும் சம்பளத்தால் இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் என்ற பெருமை அடைந்துள்ளார்.
இந்திய அளவில் பிரபாஸ்:
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பேசப்பட்ட இவர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். இதையடுத்து இவருடைய மார்க்கெட்டும், இமேஜூம் இந்திய அளவில் உயர்ந்தது. தற்போது இவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்
இதுபோக இவர் தற்போது, ஆதி புருஷ், சலார், ஸ்பிரிட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆதி புருஷ் படத்தில் அவரது சம்பளம் 150 கோடியாக இருந்தது. அதேபோல் ஸ்பிரிட் படத்திலும் இவர் 150 கோடி சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து இந்திய அளவில், உள்ள நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பிரபாஸ் உயர்ந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்