விழா மேடையில் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் – நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

0

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது புஷ்பா படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவர் முன்னிலையிலும் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் நெகிழ்ச்சி :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான திரைப்படம் புஷ்பா. தமிழ்,தெலுங்கு,இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்திய படமாக, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையில் இணைந்தது. இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் குறித்து பேசும்போது திடீரென கண் கலங்கினார். இதைப்பார்த்த இயக்குனரும் கண் கலங்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here