தமிழகம், புதுச்சேரியை தொடர்ந்து தெலுங்கானாவிலும் வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நன்கு குறைந்து வருவதால் அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியை தொடர்ந்து தெலுங்கானாவும் பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது.
கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களும் மாஸ்க் அணிந்து, அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளதாவது, “பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, கொரோனா உறுதியானால் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்