தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற பல்வேறு பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்திரி நேற்று காலமானார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வைரமுத்து பதிவு:
தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற பாடல் ஆசிரியராக விளங்கியவர் வெண்ணிலா சீதாராம சாஸ்திரி. டோலிவுட்டின் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியராக திகழ்ந்தார். இவர் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பு பாடலை சமீபத்தில் எழுதியுள்ளார்.
இந்த பாடலை பாடகர் ஹேமச்சந்திரா என்பவர் பாடியுள்ளார். வயது மூப்பு காரணமாக, நேற்று திடீரென மறைந்த அவருக்கு, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைவையடுத்து, “தெலுங்கு மொழியின் தேன் சொட்டும் பாடலாசிரியர்” என தொடங்கும் இரங்கற்பா பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு மொழியின்
தேன்சொட்டும் பாடலாசிரியர்
3000 பாடல்கள் எழுதிய முன்னோடி
‘ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி’
காலமானார் என்ற செய்தி
கண்ணாடியில் கல் விழுந்ததுபோல்
என் உள்ளத்தை உடைக்கிறதுஒரு கவிதை நட்சத்திரம்
உதிர்ந்துவிட்டதுஎன் தமிழ்க் கண்ணீரைத்
தெலுங்கு உலகத்தின்மீது தெளிக்கிறேன் pic.twitter.com/RvWCYRZ6Uw— வைரமுத்து (@Vairamuthu) December 1, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்