ஊரடங்கிற்கு கும்பிடு போட்ட தெலுங்கானா அரசு.. அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நீக்கம்!!!

0

தெலுங்கானா மாநில அரசு நாளை (ஜூன் 20,2021) முதல் அனைத்து விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.

பல மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே மாநில அரசுகள் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தெலுங்கானா மாநில அரசும் தற்போது அம்மாநில மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. அது என்னவென்றால் நாளை முதல் அனைத்து விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தொற்று குறைந்ததை அடுத்து அம்மாநில முதல்வர் அமைச்சரவையுடன்  ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த உத்தரவு செயல்படுத்தப்படும். தெலுங்கானாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,400 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவ், தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை முதல் திரும்பப் பெற வேண்டும் என, அனைத்து துறைகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here