உத்தரகண்ட் மாநில புதிய முதல்வர் – தீரத் சிங் ராவத் தேர்வு!!

0

நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவ்த் தேர்வாகியுள்ளார்.

உத்தரகண்ட்:

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் திகழ்ந்து வந்தார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களுக்கும் திரிவேந்திர சிங்கிற்கும் பல பிரச்சனைகள் நிலவி வந்தது. மேலும் இவரது ஆட்சி குறித்து தொடர்ந்து தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர் பாஜக தலைவர்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று திரிவேந்திர சிங் ராவத் அந்த மாநிலத்தின் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதற்கு பின்னனியில் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளார்களா என்ற சலசலப்பும் இருந்து வந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை வெளியீடு!!

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத், டேராடூனில் நடத்த பாஜக எம்எல்ஏ.,கள் பொதுக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மூத்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here