பணி நிரந்தரம் வழங்காதது ஏன்?? வாக்குறுதி என்னாச்சு?? பகுதிநேர ஆசிரியர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை!!

0
பணி நிரந்தரம் வழங்காதது ஏன்?? வாக்குறுதி என்னாச்சு?? பகுதிநேர ஆசிரியர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை!!
பணி நிரந்தரம் வழங்காதது ஏன்?? வாக்குறுதி என்னாச்சு?? பகுதிநேர ஆசிரியர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை!!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். ஆனால் இதற்கு இப்போது வரை அரசு செவி சாய்க்கவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஓவியம், தையல், கம்ப்யூட்டர், தோட்டக்கலை, உடற்கல்வி போன்ற ஏழு துறைகளின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

நயன்தாராவை அலறவிட்ட பயங்கரமான வில்லன் – இயக்குனர் சசிகுமாருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

ஆனால் இவர்களை இப்போது வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும் திமுக தேர்தல் சமயத்தின் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் தேர்தல் முடிந்து 2 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது வரை இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மௌனம் காப்பது ஏன்?? எங்களுக்கு எப்போது பணி நிரந்தரத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here