மின்சாரக் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை – மின்சாரத் துறை அமைச்சர்!!!  

0

தமிழ் நாட்டில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. அந்த வகையில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து சில நாட்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டண தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான அவகாசம் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் பெரும்பாலானோருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் மின் கட்டணத்திற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here