தட்கல் டிக்கெட்டுகளில் முறைகேடு, 60 ஏஜெண்டுகளை கைது செய்த ரயில்வே போலீசார்!! இனியாவது முறையாக நடக்குமா??

0

இந்திய ரயில்வே போக்குவரத்தில் தட்கல் முறையில் டிக்கெட் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த கும்பலை ரயில்வே போலீசார் கைது செய்து உள்ளனர்.

தட்கல் முன்பதிவு..!

ரயில்கள் புறப்படும் முதல்நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தட்கல் முன்பவு தொடங்கும். இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரயில் நிலைய கவுண்டர்களிலோ வாங்கலாம். ஆனால் இவ்வாறு டிக்கெட் பெறுவதில் பெரும்பாலும் முறைகேடுகள் நடைபெறுவதால் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

கள்ள சாப்ட்வேர் ஏஜென்சிகள்!!

தட்கல் முறையில் பதிவு செய்ய ஒதுக்கப்பட்ட சீட்டுக்கான டிக்கெட்டுகளை ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் போன்ற சட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி சில ட்ராவல் ஏஜென்சிகள் திருடி அதிக விலைக்கு விற்கின்றனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 50 முதல் ரூ. 100 கோடி வரை டிக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ – உயிரைப் பறிக்கும் அபாயம்..!

இந்நிலையில் இது தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். எனவே இனிமேல் தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் இருக்காது என ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here