டாடா ஸ்டீல் செஸ் ராபிட் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.
டாடா ஸ்டீல் செஸ் ராபிட்:
கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய நூலகத்தில் டாடா ஸ்டீல் செஸ் ராபிட் போட்டியானது கடந்த நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற்றது. பத்து வீரர்களுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுக்கு எதிராக ஒரு முறை போட்டியிட்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டியில், இந்தியா சார்பாக நிஹால் சரின், விடித் குஜராத்தி, எரிகைசி அர்ஜுன், குகேஷ், சேது ராமன் என 5 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தவிர்த்து, மற்ற நாடுகளில் இருந்து 5 வீரர்கள் பங்கு பெற்றனர். இதில், நடைபெற்ற 9 போட்டிகளின் முடிவில், இந்தியாவின் நிஹால் சரின் 6 ல் வெற்றி, ஒன்றில் டை செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இவரை தொடர்ந்து, எரிகைசி அர்ஜுன் 6 போட்டிகளில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், விடித் குஜராத்தி 4 போட்டியில் வெற்றி 1ல் டை செய்து வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். மற்ற இந்திய வீரர்களான குகேஷ் 5வது மற்றும் சேது ராமன் 10 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.