கொரோனா தடை நீங்கியதால் பொதுமக்கள் பண்டிகை, விழா போன்றவற்றை கோலாகலமாக சிறப்பித்து வருகின்றனர். இது போன்ற விழாக்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மதுபானம் தான். அந்த அளவுக்கு அனைவரும் மதுபானங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இந்த டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு மூடப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அரைமணி நேரம் முன்னதாக டாஸ்மாக் கடையை மூட முடியுமா? என டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்., 1000 நபர்கள் திடீர் பணி நீக்கம்! பிரபல நிறுவனம் முடிவு!!
இதற்கு டாஸ்மாக் நிர்வாகிகள் “மதுபானக் கடை செயல்படும் நேரங்கள் நீட்டிக்க அரசு ஏற்கனவே பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடை விற்பனை நேரங்களை மாற்றியமைப்பது பற்றி அரசே முடிவு செய்ய வேண்டுமே தவிர மனுதாரர் தலையிட முடியாது” என டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.