தமிழகத்தில் கொரோனா தொற்று எதிரொலி – டாஸ்மாக் கடைகளுக்கு நேரங்கள் குறைப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருந்து வரும் நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்காக அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர். இதனை பின்பற்ற தவறும் நபர்களிடம் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிகமான அளவில் தொற்று கண்டறியப்பட்டதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் கடைகளில் இரண்டு முறை கிருமி நாசினி தெளித்தல், கடைக்குள் 5 பேருக்கு மட்டுமே அனுமதி, 6 அடி தனி மனித இடைவெளி போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி – டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

இந்நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 1 மணி நேரம் முன்பாக மூடப்படும் என்று தெரிவித்தனர். மேலும் மது வாங்க வருபவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கடைகளுக்கு முன்பு மது அருந்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here