தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தபடி, தகுதியற்ற 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று 500 கடைகளும் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கிடையில் டாஸ்மாக் கடையை மதியம் 1 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு மூடலாம் என்று அமைச்சர் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து டாஸ்மாக் கடை மேலாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, மதுபான கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும்.
பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி.., உண்மையிலே நீங்க கிரேட் தான்.., வியப்படைந்த ரசிகர்கள்!!!
டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்கப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்க கூடாது. மேலும் டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கடை மேலாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.