ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். எனவே நாளை எந்த வித அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதால் மதுரை மாவட்ட கலெக்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும் என்று மதுரை ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.