ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

0
TASMAC
TASMAC

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

டாஸ்மாக் கடைகள் அடைப்பு:

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வரிவசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் வருமானத்தை அதிகரிக்க டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. இதனால் தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும் அரசு உறுதியாக இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகஸ்ட் 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!

மேலும் டாஸ்மாக் கடைகளை பூட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பொழுது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு மது வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது. தற்போது 7வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் 2,9,16,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு) டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here