தேர்தலை ஒட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – கதறும் குடிமகன்கள்!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்களும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிக பரபரப்பாக தேர்தல் களம் இருந்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக முனைப்புடன் செய்து வருகின்றனர். இவர்களை போல் தேர்தல் அதிகாரிகளும் மிக மும்மரமாக பணிகளை செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சட்டமன்ற தேர்தல் காரணமாக தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வருகிற ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு காவலர் மட்டுமே ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ!!

மேலும் வாக்குகளை எண்ணப்படும் நாளான மே மாதம் 2ம் தேதியும் டாஸ்மாக்கிற்கு விடுமுறை என்று அதிரடியாக தமிழக அரசு அறிவித்தது. தேர்தலை அமைதியாகவும் சமூகமாகவும் நடத்துவதற்காக இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பினால் குடிமகன்கள் வருத்தமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here