டாஸ்மாக்கில் இனி கூடுதல் விலையில் மது விற்பனை செய்தாலோ, சரக்கை மொத்தமாக விற்பனை செய்தாலோ குற்றவியல் நடவடிக்கை பாயும் என ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
குற்ற நடவடிக்கை பாயும்:
மாநிலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இனி டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வண்ணம் விலை பட்டியலையும் கடை முன்பாக வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த மது விற்பனை உரிய ரசீது முறையில் நடப்பதை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக மது விற்பதை தடுக்கவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்