தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக இன்று காலை 4 மணி முதல் வருகிற மே மாதம் 24ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் ஊரடங்கின் பொழுது டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இன்று(மே 10) காலை 4 மணி முதல் வருகிற மே மாதம் 24ம் தேதி காலை 4 மணி வரை அதாவது 2 வார காலத்திற்கு முழு ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கின் பொழுது சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவை எம்.பிகளான முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ராஜினாமா – அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பு!!
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுக்கள் அனைத்தும் கள்ளத்தனமாக விற்பதையும், திருடு போவதையும் தடுக்க தற்போது புதிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தற்போது எலெக்ட்ரிக் சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.