டுவிட்டர் பயனர் மற்றும் கங்கனா ராணாட்டால், பாலிவுட்டில் அடக்கு முறையாளர்களுக்கு ஆதரவுத் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள டாப்ஸி பன்னு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி.
டாப்ஸி பன்னு மீது குற்றச்சாட்டு:
டுவிட்டர் பயனர் ஒருவர் டாப்ஸி பன்னு மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும், சுஷாந்த் சிங் போன்ற நல்ல நடிகர்கள் தங்களது போராட்டத்தில் மனமுடைந்து உயிர்விடுவதற்கும் இவர்களே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனாவால் பலியாகும் பாலிசிதாரர்களுக்கு 24 மணி நேரத்தில் இழப்பீடுத் தொகை – எல்ஐசி
மேலும், பாலிவுட்டில் புதுமுகங்கள் எவ்வாறு தவறாக நடத்தப் படுகிறார்கள் என்றும், அவை திறமையுள்ள கலைஞர்கள் தங்களது உணர்ச்சிகளை விட்டு செல்ல வழிவகுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாப்ஸி பன்னுவின் பதிலடி:
இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக டாப்ஸி பன்னு, தவறாக சித்தரிக்கப் பட்ட புதுமுகங்கள் நடத்துமுறையைக் கண்டு, இனிவரும் காலங்களில் புது திறமையுள்ள கலைஞர்கள் சினிமாவில் பங்குக்கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சி மற்றும் நம்பிக்கையை கைவிட்டு, சினிமா துறையில் நுழைய அஞ்சுவார்கள்.
இதற்கு நீயும் காரணம் தான் என்றும் பதிவிட்டிருந்தார்.
நேபோட்டிசத்தில் டாப்ஸி பன்னு:
டாப்ஸி பன்னு மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் கரண் ஜோஹரின் மனதைத் தொட முயற்சிப்பதாகவும், இவர்கள் அனன்யா பாண்டே மற்றும் ஆலியா பட்டை விட அழகானவர்கள், சிறந்த நடிகைகள், ஆனால், இவர்களுக்குப் படவாய்ப்பு குறைவு என்று ஒரு நேர்காணலில் நேபோட்டிசத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார் கங்கனா ராணாட்.
இதனை அவர்கள் உணராதது ஏன் என்றும் கங்கனா ராணாட் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு டாப்ஸி பன்னு ஒரு நேர்காணலில், தான் கரண் ஜோஹர் அல்லது யாரையேனும் பிடிக்கும் பிடிக்காது என்று இதுவரை எங்கும் குறிப்பிடவில்லை என்றும், கரண் ஜோஹருடன் வழக்கமானப் பேச்சுக்களைத் தவிர வேறேதும் இருந்தது இல்லை என்றும் பதிலடிக் கொடுத்துள்ளார்.