நடிகை டாப்ஸி தொடங்கிய புதிய தொழில்.. காரணத்தை கேட்டு வாயடைத்து போன திரையுலகம்!!!

0

நடிகை டாப்ஸி, டாப்ஸி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சினிமாவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக டாப்ஸி தெரிவித்துள்ளதார். இவரின் முடிவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை டாப்ஸி ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒருவர் தான். தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்தார். அவர் அந்த படத்தில் ஒரு ஆங்கிலோ-இந்திய பெண்ணாக நடித்து இருப்பார். திரையில் அதிக நேரம் தோன்றவில்லை என்றாலும் தன் கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்ததால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் ஆரம்பம், காஞ்சனா என சில படங்களில் நடித்து விட்டு பாலிவூட்டிற்கு தாவினார். தற்போது அங்கு முன்னனி நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹசீன் தில்ரூபா நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக டாப்ஸி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் முதல் தயாரிப்பாக ‘Blur’ தயாராகிறது. இதில் டாப்ஸியே நடிக்கிறார். இதன் First Look ஐ டாப்ஸி வெளியிட்டுள்ளார். அதை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here