தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அர்ஜுன் செய்கைகள் அதையும் நடேசனுக்கு சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது. நடேசன் கோதைக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. மேலும், அர்ஜுன் நடந்துகொண்ட விஷயத்திற்காக கோதை அனைவர் மத்தியிலும் திட்ட ராகினி கோவமடைகிறார். நாங்க வீட்டை விட்டே வெளியே போறோம் என்று சொல்கிறார்.
ஏற்கனவே பிரச்சனைகளை தாங்க முடியாமல் இருக்கும் கோதைக்கு நெஞ்சு வலியே வந்து விடுகிறது. ராகினி அப்பொழுதும் சும்மா இல்லாமல் தமிழ் வீட்டிற்கு சென்று உன்னால் தான் எல்லாமே என்று சண்டையிடுகிறார். தமிழுக்கும் மனசு உறுத்த தனது அம்மாவிற்காக வேண்டி கொள்கிறார். நடசேனுக்கு தமிழில் நடவடிக்கையில் எந்த ஒரு சந்தேகமும் வரவே இல்லை. தமிழின் குணங்கள் எதுவுமே மாறவே இல்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் தேவையே இல்லாமல் அர்ஜுனை நம்புகிறோமோ என்று யோசிக்கிறார். இதனால் ராகினியை அழைத்து தமிழ் கத்தியால் குத்தியதை பார்த்தாயா?? என்று கேட்கிறார். அதற்குள் அர்ஜுன் வந்து ஏதேதோ சொல்லி அழைத்து சென்று விடுகிறார். இந்நிலையில் தான் இந்த விஷயத்தை பற்றி தீவிரமாக விசாரிக்க ஆரம்பிப்பாராம். அதன் பிறகு, கொஞ்ச உண்மைகள் அர்ஜுனை பற்றி தெரிய வருமாம். இனிமேல் தான் சீரியல் களைகட்ட உள்ளது.