தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழ் வீட்டை விட்டு வெளியேறியதால் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சீரியல் நகர்ந்து வருகிறது. அர்ஜுன் செய்யும் ஒவ்வொரு சதி வேலையில் இருந்தும் தமிழ் சாதூரியமாக தப்பித்து கொண்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கார்த்திக் முழுவதுமாக அர்ஜுனின் வலையில் சிக்கி விட்டார். இது தூரத்தில் இருந்தே பார்க்கும்போது வசுவிற்கு புரிகிறது. ஆனால் வசுவின் பேச்சு அங்கு எடுபடவே இல்லை. இந்நிலையில் இப்பொழுது தமிழ் பேக்டரியில் ஆளை வைத்து பொருட்களை திருடிய விஷயம் கோதைக்கு தெரிய வர இதனால் அதிர்ச்சியாகிறார். அர்ஜுனை கண்டபடி பேசி விடுகிறார்.
அடிக்கும் வெயிலின் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க இதை சாப்பிடுங்க…, இதுல அவ்வளவு பயன் இருக்கா??
இதனை பொறுக்க முடியாத ராஹிணி அவருக்கு எந்த மரியாதையும் இந்த வீட்டுல கிடைக்கல. மாப்பிள்ளைனு கூட யாரும் நினைக்க மாட்டேங்குறீங்க., நாங்க இந்த வீட்டை விட்டே போறோம் என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் கோதை எல்லாருமே கிளம்புங்க என்று கத்துகிறார். அப்படியே நெஞ்சு வலி வர அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், ராகினி நேராக தமிழ் வீட்டிற்கு சென்று எல்லாத்துக்கும் காரணம் நீ தான். இப்போ உனக்கு சந்தோசமா? என்று கேட்கிறார். தமிழுக்கு என்னவோ போல ஆகிறது. கோவிலுக்கு சென்று கோதை குணமாக வேண்டும் என்று வேண்டி கொள்கிறார்.