தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் அதி கனமழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆய்வு மையம் எச்சரிக்கை :

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. மேலும், பல கடலோர மாவட்டங்களில் அப்போது பெய்த மழை ஏற்படுத்திய தாக்கம் கூட இன்னும் குறையவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பொழிவு ஏற்படாமல் இருந்தது. தற்போது, நேற்று மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. சென்னையில், 10 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனை அடுத்து, தமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள், கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here