நாடு முழுவதும் கோடை வெயில் 100 டிகிரி செல்சியஸ் மேல் பதிவாகி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருந்தாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்வித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இனி வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மே 25) முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.91 கோடியாக அதிகரிப்பு!!
வருகிற ஜூன் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நேரத்தில், வெப்ப அலை குறைய இருப்பதாக வந்த தகவல் பெற்றோர் உள்ளிட்ட பலரிடமும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.