Wednesday, March 27, 2024

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த நிலை உருவாகியுள்ளதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழைப்பதிவு:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது, திருபுவனம் பகுதியில் 7 செ.மீ, ஆத்தூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் 5 செ.மீ, குறைந்தபட்சமாக வாலிநோக்கம், இறையூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • அக்டோபர் 20 ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • அக்டோபர் 21, 22, 23 ஆம் தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் இந்த நாட்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

திருமணமான புது தம்பதிகளா நீங்க.., அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணமான புது தம்பதிகள் பலரும் தங்களது எதிர்கால வாழ்க்கையை நினைத்து பல திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் வங்கிகளில் கூட்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -