தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் இதனால் காலை 11.30 மணிமுதல் மதியம் 3.30 வரை பொதுமக்கள் வெளியில் வேலைசெய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |