தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல் – மாநிலம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்!!

0

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால், நாளை நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமையான இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இன்று தடுப்பூசி முகாம் :

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அரசின் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 9ம் தேதியான நாளை முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதால், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அரசால் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமையான இன்று நடைபெற்று வருகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள, சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் கிட்டத்தட்ட 1600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here