தமிழகத்தில் சாதி தொடர்பாக ஏற்படும் மோதல் சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்க அண்மையில் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை, சாதிய வன்முறை காரணமாக கொலை வெறி தாக்குலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் மாணவர்களிடையே பிரிவினை இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை செய்தியை முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார். அதாவது “ஜாதி பிரிவினையை தூண்டும் வகையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ நடந்து கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் குறிப்பிட்டு பேசுவது, பாகுபாடு காட்டுவது போன்ற நடத்தையில் ஈடுபட்டால் டிரான்ஸ்பர் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என எச்சரித்துள்ளார்.