தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதில் அளித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர், ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.