தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை இனி, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வளவு கிட்டக்க காட்டுனா.., எப்படி தாங்குவோம் நாங்க.., ஐஸ்வர்யா மேனனின் முரட்டு புகைப்படம்!!
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழக சட்டப்பேரவை கூட்டம் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 2022-23 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18ம் தேதி சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார். அதன் மீதான விவாதம் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. உயர் கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார்.
இதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த திட்டம் மீதான விவாதத்தின் போது, இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதாவது, 10ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பால், மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்