தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சியில் மேலும் அரசு பள்ளி மாணவர்கள் ஐந்து பேருக்கும், ஒரு ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி :
மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளில் செப் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. முழுமையான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால்,அதையும் மீறி பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் இதற்கு முன்பே தொற்றால் பாதிப்படைந்தவர்கள் என்றும் தற்போது பரிசோதனையில் கண்டறிய பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது.
பள்ளிகள் திறப்பிக்கும், மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் விளக்கமளித்தார். இந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஐந்து மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.