பள்ளிகள் திறப்பிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா வந்ததுக்கும் தொடர்பில்லை- சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

0

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொல்வது வினோதமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பும், மாணவர்களுக்கு தொற்றும்:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இரு தினங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டது.  பள்ளிகள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இது மட்டுமல்லாமல், தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.  மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் பள்ளி வளாகத்திலேயே நடத்தப்படும் என்றும், இதனை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

 இதில், தற்போது  ஒரு சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, இவர்கள் படித்த பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப் பட்டுள்ளது.  இது குறித்த பத்திரிகையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கும், மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான எந்தவித தொடர்பும் இல்லை.  இவர்கள் இதற்கு முன்பே தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது, தற்போது நடந்த சோதனையில்  அது தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here