தமிழகத்தில் திறக்கப்படாமல் உள்ள 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை அடுத்த மாதத்தில் இருந்து திறக்கலாம் என்ற அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அறிக்கை தாக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை பரவல் தாக்கம் சற்று குறைந்துள்ளதை அடுத்து தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்தது. இதில், 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப் 1ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக உள்ள கல்வி இயக்குனர்களுக்கு பள்ளிகளை திறக்கும் படியும், முழுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் படியும் உத்தரவிடப்பட்டது.
மேலும், வகுப்பில் மாணவர்கள் முகக்கவசம் அணிதல், பள்ளி வளாகத்திற்குள் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனாவின் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் பள்ளிகளும் அரசின் உத்தரவின்படி திறக்கப்பட்டன.
இதனை அடுத்து, தமிழகத்தில் இன்னும் திறக்கப்படாமல் உள்ள 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரம் முதல் திறக்கலாம் என்ற அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை ஆராய்ந்து, வருகிற செப்டம்பர் 30ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் சுகாதார அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முதல்வர் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என நம்பப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்