பள்ளி கல்லூரிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகளா??  நாளை முக்கிய ஆலோசனை!!

0

தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நாளை முக்கிய முடிவு :

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள  பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, தமிழக அரசு வெளியிட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வந்தது. தொற்று பரவல் கொஞ்சம் குறைந்த நிலையில், மாணவர்களுக்கான சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட்டு, தினசரி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஓமைக்ரான் பரவல் தமிழகத்தில் தீவிரம் எடுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கூட்டத்தின் முடிவில் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், மாணவர்கள் இதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here