தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என கூறி, அதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உள்ள ஒண்ணுமே போடலன்னு அப்பட்டமா தெரியுது.. மிக மோசமான உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!!
கோடை விடுமுறை:
கொரோனா பரவலுக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, நடத்தப்படும் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 5ஆம் தேதி, தொடங்கி மே 13 வரை இவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே 2 முதல் 8ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்காது என்றும், அவர்களுக்கான தினசரி வகுப்புகள் மே 13ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்