தமிழக அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு – தென் மாநிலங்களை ஒதுக்குவதாக குற்றச்சாட்டு!!

0

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்தி நிராகரிப்பு:

இந்திய திருநாட்டின் குடியரசு தினம் வருகிற ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த திருநாளில்  பல்வேறு மாநிலங்களின் பெருமைகளை பிரதிபலிக்கும் விதமாக அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இதற்காக, மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள பெருமைகளை மாதிரி அலங்கார ஊர்திகளாக காட்சி படுத்தி, மத்திய அரசின் அனுமதிக்காக அவர்களிடம் அனுப்புவர். அந்த வகையில், தமிழகத்தின் சார்பாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய மாதிரிகள் அனுப்பப்பட்டன.

அவர்களில், பாரதி மட்டுமே தேசிய அளவில் அடையாளம் காணப்படும் நபராக விளங்குவதாகவும், மற்ற யாரையும் தங்களுக்கு தெரியாது என கூறி, தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளனர். இது போக, தென் மாநிலங்களில் கர்நாடகா நீங்கலாக கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here