தமிழக நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் எவ்வளவு வழங்குவது என்பது குறித்த ஆலோசனை தற்போது நடந்து வருகிறது.
அரசு ஆலோசனை :
தமிழகத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு, நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு பரிசுடன் ஆண்டுதோறும் பணமும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, பொங்கல் தொகுப்பு பையில் பச்சை அரிசி, கோதுமை மாவு, வெல்லம், முந்திரி, திராட்சை, ரவை, புளி உள்ளிட்ட 22 பொருட்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு சேர்த்து கரும்பும், 100 மில்லி நெய்யும் வழங்கப்பட உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், இதற்காக அரசு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் பரிசு தொகுப்புடன் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்