தமிழகத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வருவதால் அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வெயில் தாக்குதலை சற்று தளர்த்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சுற்றுலாவால் வந்த வினை.., அல்லோல்படும் பெண்கள்.., அதிர்ச்சி தகவல்!!!
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு பகுதிகளில் மே 24ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்னும் சில மணி நேரங்களில் கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக இம்மாவட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மழைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.