தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் Fan, A/C உள்ளிட்ட மின் சாதனங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்பது போல பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக மின்தடை செய்து வருகின்றனர். அப்பகுதியினர் தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும் விதமாக மின் தடை பகுதிகளை முன்கூட்டியே மின்வாரிய அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் நாளை (மே 19) பெரம்பலூர் அடுத்த பேரளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். பேரளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், அசூர், சித்தளி, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல் பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், கே.புதூர், எஸ்.குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள பகுதியினர் உரிய முன்னேற்பாடுகளை செய்து கொண்டு மின்தடைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.