தென் இந்திய பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு ஆறுதலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இன்று தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மிதமான மழை பதிவு நாளை (மார்ச் 29) முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எந்த ஒரு எச்சரிக்கை செய்திகளும் வெளியிடப்படவில்லை.