தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தொற்று குறைவு – மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அமைச்சர்!!

0

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், ஓமைக்ரான் வைரஸ் வீரியம் இல்லாவிட்டாலும் மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு மேலாக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இன்று எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் பேசிய, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கொரோனா பரவல் குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதாகவும், இருந்தாலும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொற்று உயர அதிக வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஓமைக்ரான் வைரஸ் வீரியம் இல்லாமல் இருந்தாலும், அது அதி தீவிரமாக பரவி வருவதாகவும் தெரிவித்தார். மாநிலத்தில்,  88 சதவீதத்துக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், 9 ஆயிரத்திற்கும் குறைவான அளவே படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here