தமிழகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இன்று முதல் அமல் :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், நேற்று முதல்வர் ஸ்டாலின் புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். அதன் படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு ஜனவரி 6ம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நேரத்தில் பொது போக்குவரத்து மற்றும் மக்கள் அவசியமில்லாமல் வெளியே நடமாட தடை விதிக்கப்படுகிறது.
பேருந்து மற்றும் ரயிலில் பயணிகள் 50% இருக்கைகளுடன் பயணிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இந்த நேரத்தில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் போன்றவை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இந்த இரவு ஊரடங்கின் போது, பணிக்கு செல்வோர் கண்டிப்பாக அங்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும், இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே, கண்டிப்பாக சினிமா தியேட்டர்கள் மற்றும் சேவைத் துறை உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி மற்றும் 1 முதல் 9 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி தவிர பிற கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது போக, வருகிற ஜனவரி 9ம் தேதி முதல் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில், மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் மற்ற அனைத்து செயல்களுக்கும் அனுமதி மறுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்களில் ஹோட்டல்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்